கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தந்து வருகிறது. ஆனால் அறநிலையத்துறையில் இருக்கும் அதிகாரிகள் சிலர் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் வழிபாட்டு முறைகள் குறித்து, ராமானுஜர் வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக, சிலர் அந்த வழிபாட்டு முறைகளை மாற்றி செயல்பட்டு வருகின்றனர்.

கோவில்களின் மரபு மீறப்பட்டு வருகிறது. கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை. கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுத்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். கோவில் உள் விவகாரங்களில் தலையிடும் அதிகாரிகளை கண்டித்து, வருகிற 5ம் தேதி (சனி கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று ஜீயர் கூறினார்.
No comments:
Post a Comment