
தற்பொழுது, 130 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது, இந்திட்டத்தில், மூலமாக கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் கிராம முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது விருதுநகர் மாவட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி பவுண்டேசன் மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து காரியாபட்டியில் உள்ள சூரனூர், தேனூர், சித்தனேந்தல், எஸ்.மறைக்குளம், ஏ. தொட்டியங்குளம் ஆகிய 5 கிராமங்களைத் தத்தெடுத்து சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை செயல்படுத்தி வருகிறது.
திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கிராம சேவா கேந்திரா மையங்கள் தொட்டியங்குளம், சூரனூர் மற்றும் சித்தனேந்தல் ஆகிய 3 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 கிராமங்களிலும் தலா 1 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.
இதல், சுமார் 1200 குடும்பங்கள் பங்கேற்றனர். இதன் துவக்கவிழாவுக்கு, பாரத ஸ்டேட் வங்கி காரியாபட்டி கிளை மேலாளர், பஞ்சாயத்து தலைவர்கள்,கிராம பொது மக்கள் மற்றும் தானம் அறக்கட்டளை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment