

இது குறித்து கைத்தறி, துணிநூல்துறை உதவி இயக்குனர் வெங்கடேஷ் கூறும்போது, கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தயாரிக்கும் பணிகள் ஆண்டு தோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்து 253 பெடல் தறிகளுக்கு, இந்த கல்வியாண்டிற்கான சீருடைகள் நெய்யும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல், வரும் செப்டம்பர் மாதம் வரையில் பள்ளி சீருடைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது வரை தயாரான 25 லட்சத்து, 5 ஆயிரம் மீட்டர் சீருடை துணிகள் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது உற்பத்தி சதவிகிதத்தில் 39 சதவிகிதமாகும். தொடர்ந்து வரும் மாதங்களில் மீதம் உள்ள சீருடைகளும் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment