விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம், மல்லாங்கிணர் ராஜாமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மல்லாங்கிணறு நகரச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வரும் 31ந் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப் பாண்டியன் நினைவு நாளன்று, மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் அமைச்சர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது என்றும், முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் வையம்பட்டி வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மல்லாங்கிணறு பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், காரியாபட்டி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கல்குறிச்சி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேகர், சிதம்பர பாரதி, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் குருசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment