விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகன் கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேல்முருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment