விருதுநகர் அருகே, சாலை விபத்தில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுனர் பலி. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 October 2022

விருதுநகர் அருகே, சாலை விபத்தில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுனர் பலி.

விருதுநகர் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசராகவன் (52). இவர் அரசு போக்குவரத்துத்துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இன்று விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீனிவாசராகவன், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 


சத்திரரெட்டியபட்டி சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று, இருசக்கர வானத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய சீனிவாசராகவன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தகவலறிந்த பாண்டியன் நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, சீனிவாசராகவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad