போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் முன்னிலை வைத்தார். காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில் பேரணியை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவர் பிருந்தா சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர்கள் கருப்பையா, சின்னச்சாமி ஆகியோர் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது நோய் வராமல் தடுப்பு பற்றி பேசினார்கள். பேரணியில் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் கயல்விழி, சப் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி , தொண்டு நிறுவன பிரதிநிதிகள் எஸ்பி.எம் டிரஸ்ட் அழகர்சாமி, சுரபி டிரஸ்ட் விக்டர், ஜனசக்தி சிவக்குமார், இன்பம் பவுண்டேசன் விஜயகுமார், வழக்கறிஞர்கள் சங்க துணை செயலாளர் செந்தில்குமார், கிரீன் பவுண்டேஷன் பொன்ராம், சிகரம் டிரஸ்ட் வளர்மதிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மைதான வளாகத்தில், டெங்கு நோய் தடுப்பு பற்றி அமைக்கப்பட்ட கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment