கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 விழுக்காடு என்பதை 30 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வேண்டும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டாக குறைத்திட வேண்டும், மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் போனஸ் நாள் கணக்கில் கிராம உதவியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுநர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
01/06/1995க்கு முன்பு பணிபார்த்த காலத்தை பணிகாலமாக எடுத்துகொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை நிரப்பும்போது தேர்வாணயம் மூலம் நிரப்பிட வேண்டும் குறைந்தபட்ச கல்விதகுதி 10ம் வகுப்பு என்று நிர்ணயம் செய்ய வேண்டும். பதவிஉயர்வில் சென்று ஓய்வு பெற்றவர்களுக்கு முந்தைய பணி காலத்தை 100 விழுக்காடு எடுத்து கொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
கிராம ஊழியர்களை கிராம பணியை தவிர அலுவலகத்தில் இரவு காவல் பணி போன்ற மாற்று பணிகளுக்கு பயன்படுத்தகூடாது என்று, நிரந்தர உத்தரவு வழங்கிட வேண்டும். கடந்த ஜனவரி 2023ம் ஆண்டு அன்று 2748 காலிப் பணியிடங்களை நிரப்பி புதியதாக பணிக்கு வந்தவர்களுக்கு முறையாக சிபிஎஸ் கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்கிட வேண்டும். மலைப்பகுதியில் பணிபார்க்கும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று பாதுகாப்பு உபகரணங்கள் கிராம ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
மேற்கண்ட 14கோரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சருக் அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்ட்டிருந்து. மேலும், விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சார்பாக 23 ந் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம், 7ந் தேதி காத்திருப்பு போராட்டம் 19 ந் தேதி ஒரு நாள் விடுப்பு கொடுப்பது, 28ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment