உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 September 2022

உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி.

உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் சுகாதார மையங்களில் உலக ரேபீஸ் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ரேபீஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பதன் மூலம் இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முயற்சிப்பேன் என்பது போன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad