அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயம் நடைபெற்று வரும் இந்த பகுதியில் மக்காச்சோளம் வெள்ளைச் சோளம் சிகப்பு சோளம் கம்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டுப் பன்றிகள் இங்கு உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை சேதப்படுத்தி பயிர்களை அழித்து வருகின்றன மேலும் மான்களும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுவரை மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் தற்போது நல்ல மழை பெய்தும் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று(26-10-2022) பெரிய புளியம்பட்டி காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் காட்டுப்பன்றிகளை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment