அருப்புக்கோட்டை சிவசுப்பிரமணியபுரம் தெருவை சேர்ந்தவர் சரவணன் இவர் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் சரவணனுக்கும் அவருடைய தம்பி பழனிக்குமார் என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன்பகை இருந்துள்ளது.
இந்நிலையில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள சரவணனின் கடைக்கு சென்ற பழனிக்குமார் உள்ளிட்ட மூன்று பேர் சொத்து பிரச்சினையில் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என கூறி சரவணனை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் புகாரின்பேரில் நகர் காவல் நிலைய போலீசார் பழனிக்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது நேற்று (18-10-2022) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment