அருப்புக்கோட்டை அஜீஸ் நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து அவ்வழியே இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மீது விழுகிறது என்றும் இந்த குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியின் அருகே பள்ளியும் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பகுதியில் குப்பை தொட்டி வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment