பழைய மாணவர்கள் மீள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் குடும்ப விழா. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

பழைய மாணவர்கள் மீள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் குடும்ப விழா.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரியில் 1982-1985 ஆண்டு பி.காம் பிஎஸ்சி பிஏ உள்ளிட்ட பட்டம் பயின்ற பழைய மாணவர்கள் மீள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பழைய மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு குடும்ப விழாவாக நடைபெற்றது. 


பழைய நண்பர்களை சந்தித்து கொண்ட மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது கல்லூரி அனுபவங்களையும் தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரை பற்றியும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் 1982-1985 ஆம் ஆண்டு பழைய ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களது மாணவர்களை பற்றி பெருமையாக பேசி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும் கல்லூரிக்கும் பழைய மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினர். அதேபோல் பழைய ஆசிரியர்கள் தங்களிடம் பயின்ற பழைய மாணவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பர்களை சந்தித்து அனைவரும் ஒன்றாக இணைந்து கலந்துரையாடி இறுதியாக பழைய மாணவர்கள் விடைபெற்றனர். இந்நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad