மாடு மோதி காயமடைந்த முதியவர் இறப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 October 2022

மாடு மோதி காயமடைந்த முதியவர் இறப்பு.

அருப்புக்கோட்டை திருநகரம் ரத்தின சபாபதி புரம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (72) இந்நிலையில் சந்திரசேகரன் கடந்த 2ம் தேதி மருந்து வாங்குவதற்காக விருதுநகர் சாலையில் உள்ள மருந்து கடைக்கு வந்த போது மாடு இடித்து கீழே விழுந்து காயமடைந்தார். 


இதனையடுத்து சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகரன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் நேற்று இறந்தார். இதுகுறித்து சந்திரசேகரன் மனைவி நட்டாத்தி புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad