இருசக்கர வாகனத்தின் பின்னால் கார் மோதி விபத்து. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 October 2022

இருசக்கர வாகனத்தின் பின்னால் கார் மோதி விபத்து.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (28) இந்நிலையில் சுந்தரபாண்டி தனது தம்பியுடன் மதுரை சென்றுவிட்டு அருப்புக்கோட்டை வழியாக இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அரசு ஐடிஐ கல்லூரி அருகே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றபோது பின்னால் வந்த கார் மோதி சுந்தரபாண்டி படுகாயமடைந்தார். கார் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


இந்த விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad