கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறி. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 October 2022

கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறி.

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி இவர் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் சாலையோரம் செடி நட்டு பராமரிக்கும் வேலை செய்து வருகிறார். 


இந்நிலையில் நேற்று (17-10-2022) தங்கபாண்டி பந்தல்குடி புறவழிச்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தங்கபாண்டியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடமிருந்த செல்போனை வழிப்பறி செய்து தப்பியோடினர். 


இந்த சம்பவம் குறித்து தங்கபாண்டி புகாரின்பேரில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad