காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக் கூட்டங்கள். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 November 2022

காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுககளில் கிராமசபைக் கூட்டங்கள்.

தமிழகத்தில் ஊராட்சிககளில் இதுவரை கிராமசபைக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக நகராட்சி, மற்றும் பேரூராட்சிகள் அளவிலான கிராமசபா  கூட்டங்கள்   நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் கிராமசபைக் கட்டம் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது.                


காரியாபட்டி பேரூராட்சி   10வது     வார்டில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டம் வார்டு உறுப்பினரும், பேரூராட்சி தலைவருமான செந்தில் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பேரூராட்சியில் உள்ள 1வது வார்டில் கவுன்சிலர் லியாகத் அலி, 2வது வார்டில் கவுன்சிலர் ராம்தாஸ், 3வது வார்டில்  கவுன்சிலர் முனீஸ்வரி, 4வது வார்டு ரூபி, 5வது வார்டு கவுன்சிலர் முகமது முஸ்தபா 6வது வார்டு கவுன்சிலர் சங்கரேஸ்வரன், 7வது வார்டு கவுன்சிலர் வசந்தா 8வது வார்டுகளின் சிலர் நாகஜோதி 9வது வார்டு கவுன் சிலரசரஸ்வதி 11-வது வார்டு தீபா, 12வது வார்டு கவுன்சிலர் சத்தியபாமா, 13. வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், 14வது வார்டு திருக்குமாரி, 15-வது வார்டு முத்துக்குமார்  ஆகியோர் முன்னிலையில் கிராமசபைக்கூட்டங்கள்  நடைபெற்றது. 


கூட்டத்தில், அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, குளியல்தொட்டி, அமைத்தல்,பொதுகழிப்பறை  மற்றும் வடிகால்  வசதி,   பகுதி நேர ரேசன்கடை, அங்கன்வாடி மையம் அமைத்தல்  குறித்து மனு கொடுத்தனர். கூட்டத்தில், பேரூராட்சித் தலைவர், செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார். செயற்பொறியாளர் சுரேஷ், பொறியாளர்  கணேசன் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். கூட்டத்தில், தலைவர்   செந்தில் பேசும்போது: தமிழக முதல்வர் அறிவிப்பு படி முதன்முறையாக கிராமசபைக் கூட்டங்கள் அனைத்து வார்டுகளிலும் கவுன்சிலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை  தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும்.  குடிநீர், சாலைவசதி, தெருமின் விளக்கு வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.  பேரூராட்சியில், கிராமசபைக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி கொடுத்த கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad