விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (42). இவர் கிருஷ்ணன்கோவில் அருகே, ஒரு பட்டாசு ஆலையில் கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு, தன்னிடம் இருந்த பணத்தை எண்ணித் தருமாறு, தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மகேஷ், இவரது சகோதரர் சிவா ஆகியோரிடம் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, மகேஷ், சிவா இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜனை கடுமையாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த சுந்தர்ராஜன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த மகேஷ், சிவா இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து, தகவலறிந்த கூமாப்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று சுந்தரராஜனின் உடலை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மகேஷ், சிவா இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment