அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்து நகர் பகுதியில் மய்யம் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மய்யம் அறக்கட்டளை நிர்வாகிகள் பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கினர். இதில் மய்யம் அறக்கட்டளை நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment