
விளையாட்டு துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் போது அந்த மாணவர்கள் நாளைய சமுதாயத்தை திறம்பட நடத்துவதற்கு தகுதி பெற்றவர்களாக மாறுகிறார்கள். நாம் கல்வியில் அறிவை பெறுகிறோம் அதேபோல் விளையாட்டிலும் உடல் திறனை பக்குவப்படுத்தி கொண்டால் தலைமை பண்பு வளரும். விளையாட்டில் தனியாக வெற்றி பெற்றுவிட முடியாது மனம் மூளை உடல் மூன்றும் இணைந்துதான் விளையாட்டில் வெற்றி பெறமுடியும் அதேபோல் சக வீரர்களுடன் அரவணைத்து வழிநடத்தினால் தலைமை பண்பு இருந்தால் மட்டுமே விளையாட்டு போட்டியில் வெற்றி பெறமுடியும்.
மாணவர்களிடையே விளையாட்டை அதிகப்படுத்தும் விதமாக தேர்வுகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் மதிப்பெண்கள் வழங்கி ஊக்கப்படுத்தி வருவதாகவும் இதை மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் மாணவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவிற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எந்த ஒரு செயலையும் திட்டமிடலுடன் மாணவர்கள் செயல்பட்டு பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.
No comments:
Post a Comment